May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

May 9, 2024

போர்க்காலத்தில் ஏன் நாவல்கள் எழவில்லை?   நாவற்காலம் 02 ஈழத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் கூரான இன முரண்களால் எழுந்த  உள்நாட்டு யுத்தத்தோடு ஈழத்தின் நாவல் வளர்ச்சி  மெல்லச் சரிந்தது. பேரியலக்கிய வடிவமான நாவல் முயற்சிகளின்  இச்சரிவின் பின்னால் போர் இருக்கிறதா என்ற கேள்விக்கு  போரும் இருக்கிறது என்ற பதிலே சரியானது என்று நினைக்கிறேன். இச்சரிவை அக்கால சமூக, அரசியல் சூழல் இரண்டு வகையில் பாதித்தது. அதில் முதன்மையானது,   `அரசியல்` நிலைபாடுகள் நாவலின் தேவையை முழுவதுமாக `சமூக…

May 1, 2024

உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …

April 25, 2024

சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன.  தேவாலயங்களுக்கு முன்னால்  மடுமாதா வருகைக்கான வரவேற்புகள்  பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக்  கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…

April 17, 2024

  Bruce Lee’s Library எதிராளி / THE OPPONENT சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறிய பிறகு இலக்கியம் என்னை  நமட்டுச் சிரிப்புடன் தான் எதிர்கொண்டது.  முன்பிருந்தே பெரும்பாலும் தினசரி ஏதேனும் எழுதுபவன், வாசிப்பவன்.  புனைவெழுதுவதைக் கைவிடாமல் இருந்ததுதான் என் வாழ்வில் எனக்கே நான் செய்துகொண்ட முழு நற்செயல்.  தொடங்கியதெல்லாம் இலக்கியத்தில் என்பதால் அது எங்களை நீங்காமல் உண்மையாக உடனிருந்தது. புனைவு எழுதுவதோ அதை எழுதும் போதே  அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ பயணங்கள் போவதோ எனக்குப் பழக்கமானதும் பிடித்ததும். …

April 11, 2024

நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம்  என்ற என்னுடைய குறிப்பை வாசித்த நண்பர் ஒருவர் ஞாபக சத்தி / நினைவாற்றல் பற்றிக் கேட்டிருந்தார்.  குறிப்பாகக் கல்வி, கலை இலக்கியத்தில் அதன் பயன் பற்றியும் மனனம் செய்தல் போன்ற ஞாபகத்தை  நிலைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றியும் உரையாடல் ஒன்றைச் செய்யலாமா என்றார்.  என்னளவில் அவற்றைப்பற்றிய  புரிதல்களை உரையாடப் பார்க்கிறேன் என்றேன்.   மனித நினைவாற்றல் என்பது அவர்களின் பரிணாம வளர்ச்சியோடு மேம்பாடு அடைந்து வந்த ஒன்று.  மொழி நிகழ்கின்ற முக்கியமான வெளி.  நினைவாற்றலை நிலைபடுத்தல்…

April 9, 2024

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். இரவுப்பயணம், பக்கத்தில் தன்னுடைய ஐம்பதுகளில் இருந்த நபரொருவர் அமர்ந்து வந்தார். அடிப்படையான விசாரிப்புகள், புன்னகையோடு அமைதியாகிவிட்டோம். பகல் வெக்கையின் களைப்பு உடம்பை வறட்டியிருந்ததால்,  கொஞ்சநேரம் வாசித்து விட்டு உறங்கி விட்டேன். நள்ளிரவிற்குப் பிறகு திடுக்கிட்டு எழுந்து  யன்னலால் பார்த்தேன். கிராமங்களின் தோற்றங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிங்களக் கிராமங்களா, தமிழ்க் கிராமங்களா என்று  மட்டுப்பிடிக்க முடியவில்லை. கைபேசியை எடுக்கப் போன போது பக்கத்தில் இருந்தவர்  மதவாச்சி நெருங்குது என்றார். நான் வெளியில் பார்த்தேன் உறுதிப்படுத்த…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’