July 8, 2024

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …

July 2, 2024

தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் ` அறிதல் முறைகளில்  பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல்.  மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை.  தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis  என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல.  தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு…

June 13, 2024

எருமை அறிவு இலக்கியம் அறிவின் (knowledge) மீதா புத்திசாலித்தனத்தின் (intelligence) மீதா கவனக் குவிப்பைச்ச் செய்ய வேண்டும் என்று நண்பர் கேள்வியொன்றோடு உரையாடலொன்றை முடித்திருந்தார். விலங்கிலிருந்து உன்னித்து எழுந்த மனிதர்கள் இவ்விரண்டு செயலாலும் ஆனவர்கள்தான்.   மனிதர்களின்  அறிவு  (knowledge), இன்னொன்று அவர்களின் புத்தி கூர்மை (intelligence) இரண்டுக்குமான அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது இதைப்பற்றிய தெளிவையும் இலக்கியம் எதை அடிப்படையாகக் கொள்கின்றது என்பதையையும் காணலாம். மானிட அறிவு என்பது அடிப்படையில் உலகைப் புரிந்து கொள்வதற்கான மனிதர்களின் திறன். …

May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

May 6, 2024

பிணி தீர்ச் சிறுசொல் காலையில் எழும்போதே தடிமன் காய்ச்சல். வெய்யிலைச் சொல்லி நேற்றுப் பழங்களை நிறைய உண்டேன். தர்ப்பூசணி, ஜம்புக்காய், குளிர்த்தண்ணீரை அளவுக்கதிகமாய் குடித்தேன். அதிலெழுந்த விளைவு.  இந்த வெய்யில் எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. வழமையாக நான் இது போல் விசேடமாக வெய்யிலுக்கு என்று எதுவும் உண்பதில்லை. குடிப்பதில்லை. பச்சைத்தண்ணீர் இயல்பிலேயே நிறையகுடிப்பேன். வெய்யில் காலங்களில் அளவு கொஞ்சம் அதிகப்படும். அவ்வளவுதான். முகத்தைப் பற்றியோ தோலைப்பற்றியோ அதன் நிறங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. என்னுடைய கரிய உடல்…

April 28, 2024

சிவப்பில் உறைந்த காலம் வாசிப்பையும் எழுத்தையும்  இராணுவ ஒழுங்கிற்குக் கொண்டு வந்த பிறகு, படங்களைப் பார்பதை வெகுவாகக் குறைத்திருக்கிறேன். மிக மிகத் தெரிவு செய்து;  நண்பர்களின் பரிந்துரைகளை வடிகட்டியே படங்களைப் பார்க்கிறேன். பொழுபோக்குப் படங்களை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். கடைசியாக ‘பிரம்மயுகம்’ பார்த்தேன். பிடித்திருந்தது.  அனுபவக் குறிப்பொன்று என் journal இல் எழுதி வைத்திருக்கிறேன். விரிவாக எழுத வேண்டும். கொலனியம் பற்றிய ஒரு முக்கிய உரையாடல் அதில் இருக்கிறது. காலம் பற்றியும் வரலாறு பற்றியும் அதில் ஒரு…

April 17, 2024

  Bruce Lee’s Library எதிராளி / THE OPPONENT சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறிய பிறகு இலக்கியம் என்னை  நமட்டுச் சிரிப்புடன் தான் எதிர்கொண்டது.  முன்பிருந்தே பெரும்பாலும் தினசரி ஏதேனும் எழுதுபவன், வாசிப்பவன்.  புனைவெழுதுவதைக் கைவிடாமல் இருந்ததுதான் என் வாழ்வில் எனக்கே நான் செய்துகொண்ட முழு நற்செயல்.  தொடங்கியதெல்லாம் இலக்கியத்தில் என்பதால் அது எங்களை நீங்காமல் உண்மையாக உடனிருந்தது. புனைவு எழுதுவதோ அதை எழுதும் போதே  அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ பயணங்கள் போவதோ எனக்குப் பழக்கமானதும் பிடித்ததும். …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’