May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

April 17, 2024

  Bruce Lee’s Library எதிராளி / THE OPPONENT சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறிய பிறகு இலக்கியம் என்னை  நமட்டுச் சிரிப்புடன் தான் எதிர்கொண்டது.  முன்பிருந்தே பெரும்பாலும் தினசரி ஏதேனும் எழுதுபவன், வாசிப்பவன்.  புனைவெழுதுவதைக் கைவிடாமல் இருந்ததுதான் என் வாழ்வில் எனக்கே நான் செய்துகொண்ட முழு நற்செயல்.  தொடங்கியதெல்லாம் இலக்கியத்தில் என்பதால் அது எங்களை நீங்காமல் உண்மையாக உடனிருந்தது. புனைவு எழுதுவதோ அதை எழுதும் போதே  அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ பயணங்கள் போவதோ எனக்குப் பழக்கமானதும் பிடித்ததும். …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’