September 13, 2024

  பெரிய மன்றாடியாரின் பெயரன் என்று கிழவரிடம் சொல்லுங்கள்` வாயில் காவலரிடம் சொல்லி விட்டு,  சுருவத்தடியில்  அமர்ந்து கொண்டான் உக்காரா. பணிக்கர் கிழவரின் களரிக்கு அனுமதியில்லாமல் போக முடியாது. தனக்குரிய கனம் பண்ணுகைகளை எதிர்பார்ப்பவர்.  மன்றாடியாரின் அணுக்கமான சீடப்பிள்ளை என்றாலும், இவனுக்கு அவர் பெரிதாகப் பழக்கமில்லை. சிறுவயதிலேயே தாயுடன் மதவாச்சிக்குச் சென்றுவிட்டான்.  ஆனால் அவரை பெரிய மன்றாடியாரின் கடைசி நாட்களில் அவரின் சொற்களில் இருந்து அறிந்து கொண்டவன். கால்கள் வலித்தன. செட்டி குளத்தில் உசுப்பிய மோட்டார் சைக்கிளை…

September 9, 2024

`இருட்டின் ஆழமே மெய்யானது.  தீயும் ஒளியும்  அதில் நிகழ்ந்த தற்செயல்.  தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது.  இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே  முதல் சொல் பிறந்தது.  `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை.  தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது`  மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும்…

May 1, 2024

உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’