September 30, 2024

ஒலிச்சி | காளம் 07 மாசிப்பனி,  கட்டை விரல் நுணியை மரக்கச்செய்து நுண்மையான ஊசி முனைகளால் நெருடியது. சகட்டுப் பனிக்குள்ளும் தன் நாளாந்த சடங்குகளை ஆரம்பிப்பதற்கு ஒலும்பி  பெருங்கிராய் வயல் பரப்பின் கிழக்காக நீளும் வரம்பை நெருங்கினார்.  ஒவ்வொரு நாளும் அவருக்கு வயற்கிணற்றடியில்தான் விடிய வேண்டும். கடைவாய்க்குள் வேப்பங்குச்சியை அதக்கிக்கொண்டே வரம்புகளில் நடந்து வந்தார். மென்பனியின் கசட்டு மைமலில் துலாவின் அந்தம் கரைந்து வானத்தில் சொருகியிருப்பது போன்ற பிரமையைத் தந்தது. கிணற்றை நெருங்கி  துலாவைச்சாய்த்து  பட்டை வாளியில்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’