September 16, 2024

செட்டிகுளம் மெனிக்பாமிற்கு தெற்கே  ஒன்றரை மைல்கள் தள்ளி இருந்த  காட்டுக்குள் , நாகர்களுடைய ஈமைத்தாழிகளைத் தேடிவந்த தொல்லியல்காரர்கள் தோண்டிய  துளைகளிலொன்றை  இளம் அன்னை அகழான் வளையாக  ஆக்கிக்கொண்டது. அதே காட்டின் அடர் பகுதியொன்றில் சருகுப் புலி ஒன்றுடன்  நிகர் நின்றதில் இடது காற் தொடை கடித்துக் குதறப்பட்டு  வீறிட்டுக்கொண்டே புதருக்குள் பாய்ந்து தப்பியது  தாமசி என்ற  கணநரி. கடியுண்ட காலை இழுத்து இழுத்து வந்து அவ்வளையின் வாசலில் படுத்துக்கொண்டது. காயத்திலிருந்து பெருமளவு குருதி வெளியேறி உடல் சோர்ந்து…

September 13, 2024

  பெரிய மன்றாடியாரின் பெயரன் என்று கிழவரிடம் சொல்லுங்கள்` வாயில் காவலரிடம் சொல்லி விட்டு,  சுருவத்தடியில்  அமர்ந்து கொண்டான் உக்காரா. பணிக்கர் கிழவரின் களரிக்கு அனுமதியில்லாமல் போக முடியாது. தனக்குரிய கனம் பண்ணுகைகளை எதிர்பார்ப்பவர்.  மன்றாடியாரின் அணுக்கமான சீடப்பிள்ளை என்றாலும், இவனுக்கு அவர் பெரிதாகப் பழக்கமில்லை. சிறுவயதிலேயே தாயுடன் மதவாச்சிக்குச் சென்றுவிட்டான்.  ஆனால் அவரை பெரிய மன்றாடியாரின் கடைசி நாட்களில் அவரின் சொற்களில் இருந்து அறிந்து கொண்டவன். கால்கள் வலித்தன. செட்டி குளத்தில் உசுப்பிய மோட்டார் சைக்கிளை…

September 9, 2024

  போர்க்கதைகள் நான் மிக அறிந்ததாய் இருந்தன. புனைவிலக்கியத்தில் அறிந்ததை எழுதுவது போலச் சலிப்பான வேலை வேறில்லை. அறிந்தவை ஒரு வகையில் அகங்காரத்தைச் சேர்ந்தவை. அறிந்ததை விடவும் அறியாததே சூர் கொண்ட பெருந் தெய்வம். அறிந்ததை அழித்து முன் செல்லும் பெருக்கே புனைவெழுத்து. அறியவியலாத அத் தெய்வத்திற்குத் தலையைக் கொடுக்காமல் அது யாருக்கும் திறப்பதில்லை. தன்னகங்காரத்தை பலி கொடுத்தே அதன் பாதைகளைத் திறக்க வேண்டும். அதுவே செயலூக்கத்திற்கான அடிப்படை. புறமனதின் களி கூடிச்செல்லும் போது அது தன்னைத்…

September 9, 2024

`இருட்டின் ஆழமே மெய்யானது.  தீயும் ஒளியும்  அதில் நிகழ்ந்த தற்செயல்.  தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது.  இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே  முதல் சொல் பிறந்தது.  `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை.  தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது`  மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’