April 14, 2024

பறவையின் பங்கு யாழ்ப்பாணப்பகுதிகளில் மா, புளி போன்ற  பயன் தரும் மரங்களை அவை காய்த்து முதிரும் நிலையில் அறுவடை செய்தலை , ‘மரம் உலுப்புதல்’ என்பர். உலுப்பப்படும்  போது மரத்தின் சொந்தக்காரர்கள், மரத்தை உலுப்புவர் ஆகியோருக்கு அறுவடையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் கிடைக்கும். அவற்றோடு மரத்தின் குறித்த காய், கனிகளுள்ள கிளைகள் உலுப்பப்படாது பறவைகள், விலங்குகளுக்கு விடப்படும். இப்படியொரு மரபு இருந்திருக்கிரது. பின்னர் மெல்ல மெல்ல வழங்கொழிந்தது. மரத்தின் முழு அறுவடையும் சொந்தக்காரருக்கு வந்ததுடன் அறுவடை செய்பவர் …

April 11, 2024

நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம்  என்ற என்னுடைய குறிப்பை வாசித்த நண்பர் ஒருவர் ஞாபக சத்தி / நினைவாற்றல் பற்றிக் கேட்டிருந்தார்.  குறிப்பாகக் கல்வி, கலை இலக்கியத்தில் அதன் பயன் பற்றியும் மனனம் செய்தல் போன்ற ஞாபகத்தை  நிலைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றியும் உரையாடல் ஒன்றைச் செய்யலாமா என்றார்.  என்னளவில் அவற்றைப்பற்றிய  புரிதல்களை உரையாடப் பார்க்கிறேன் என்றேன்.   மனித நினைவாற்றல் என்பது அவர்களின் பரிணாம வளர்ச்சியோடு மேம்பாடு அடைந்து வந்த ஒன்று.  மொழி நிகழ்கின்ற முக்கியமான வெளி.  நினைவாற்றலை நிலைபடுத்தல்…

February 4, 2024

செம்முகம் ‘சீலன்’  என்று அழைக்கப்படும் சத்தியசீலன்  சமகால  இலங்கைத் தமிழ் அரங்கக் கலைஞர். செம்முகம் ஆற்றுகைக்குழு என்ற பெயரில் அரங்கச் செயற்பாட்டு  வேலைகளை தன்னுடைய குழுவினரோடு முன்னெடுத்து வருகின்றார்.  பல்வேறு அரங்குவடிவங்களையும், பரிசோதனைகளையும், சமூகத்தை முன்னிட்டு மேற்கொண்டு வருகின்றார். அவருடைய இந்த அரங்க வெளிப்பயணம் பற்றியும் அவருடைய கலைசார் நிலைப்பாடுகள் பற்றியும்  பகிர்ந்துகொண்ட உரையாடல் இது. செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தொடக்கம் மற்றும் அதன் பயணம்  பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா? செம்முகம் ஆற்றுகைக் குழுவினுடய பயணம்…

December 27, 2023

‘உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் சொந்தப்பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்’ என்றார் இயக்குனர்அபாஸ் கிரயோஸ்தமி. இந்திய வணிக சினிமாவின் முன்னால் பண்பாட்டின் களத்தில் நின்று நல்ல படம் எடுப்போம் என்று நிற்பது  முக்கியமான கலைத்துவ முடிவுதான். அப்படியான கலைஞர்களை நோக்கிச்செல்வதே இந்த உரையாடல்களைத் தொடக்க முக்கியமான காரணம்.  இலக்கியத்தில் இருந்துகொண்டு ஏனைய சமகால கலைவடிவங்களுடன் உரையாடிப்பார்ப்பது  அதை எழுத்திற்கு கொண்டுவருவது மெல்ல மெல்லச் செய்தாலும் பயன் பெறுமதியோடு இருக்க வேண்டும் என்று…

November 2, 2023

விசாகேச சந்திரசேகரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விசாகேச சந்திரசேகரம், இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் பணியாற்றிவருகிறார். நாவல் ,  நாடகவாக்கம் மற்றும் திரைப்படங்களை இயக்கிவரும் ஒரு கலைஞர். சிங்களத்திலும் தமிழிலும் படைப்புக்களை ஆக்கிவருகின்றார்.  இவருடைய இயக்கத்தில் வெளியான Frangipani , Paangshu ஆகிய திரைப்படங்கள் புகழ்பெற்றவை. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றவை. இவருடைய இயக்கத்தில்  இவ்வருடம் வெளியான மணல் என்ற தமிழ்த் திரைப்படம் சமீபத்தில் திரைத்துறையில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான ரோட்டர்டாமின் (Rotterdam) சர்வதேச திரைப்பட விழாவின்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’