August 18, 2023

இராவணன்  பற்றிச் சமூக வலைத்தளங்கள் வழியே கட்டமைக்கப்படும் பெருமிதங்களும், தகவல் பிழைகளும் தொடர்ச்சியாக  இணையத்தை மட்டும் தங்களின் அறிதல் வழியாகக் கொண்ட குறிப்பிட்ட அளவு மக்களை வரலாறு, பண்பாடு தொடர்பில் புரிதலற்ற நபர்களாக கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன. தொன்மங்களாக கருதப்படக்கூடிய புராணங்கள்/ இதிகாசங்களையும், வரலாற்றையும் வேறுபடுத்திக் காணத போது சமூகத்தின் பொது அபிப்பிராயத்திலும் பொதுப்புத்தியிலும் அறியாமையின் அபாயங்கள் கிளைவிடுகின்றன. இலங்கையின் பாராளுமன்றத்தில் ஒரு சிங்கள அரசியல்வாதி இராவணனை சிங்கள மன்னன் என்கிறார். இந்தா நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று தமிழ்…

August 4, 2023

சில வருடங்களுக்கு முன்பு மலையாள/ தமிழ் சினிமா நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட நடிகை பார்வதி  தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்க கூட ‘மேனன்’ என்ற சாதியப் பின்னொட்டை இனிமேல் பயன் படுத்த போவதில்லை என்று அறிவித்தததோடு  தன்னுடைய உத்தியோக பூர்வ இணையப்பக்கங்கள், திரைப்படங்களில்  அவற்றை நீக்கினார்.   இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் அது  செய்த சிறிய நற்செயல் மட்டுமல்ல அது ஒரு பெரிய காலடி. ஏனெனில் இந்திய  மனங்களை , கருத்தியல் கூட்டை வடிவமைப்பதில் இந்திய சினிமாவின்…

July 28, 2023

‘மற்றவர்கள்’ என்று யாரும் இல்லை – ரமணர்  தமிழ்ச் சமூக அமைப்பின் உருவாக்கத்தையும், அதன் வரலாற்றையும், போக்கையும் விளங்கிக்கொள்வதற்கு சாதிய ஆய்வுகளும் உரையாடல்களும் முக்கியமானவை. சாதியம் என்பது ஒருவகைச் சமூக உறவாகும். சமூகத்தில் உள்ள பல்வேறு சாதிகள் தமக்கிடையே கொண்டிருக்கிற பொருளாதார, அரசியல், பண்பாட்டு  உறவுகளின் மூலமே சாதியம் என்ற சமூக அமைப்பு நிலைபெறுகின்றது. அடிப்படையில் இச் சாதிய உறவுகள் ‘சமத்துவமற்ற’ தன்மையினை அடிப்படையாக கொண்டவை. ஆதிக்கமும் வன்முறையும் நிறைந்தவை. தமிழ்ச் சமூகத்தில் இருக்க கூடிய ஆதிக்க…

July 25, 2023

இயற்கை மற்றும் சமூகச்சூழமைப்பில் மனிதர்கள் இயங்கும் முறையும் அவர்களின் நடத்தை முறையும்தான் உளவியலின் அடிப்படைகள். -மிக்காயில் பக்தின் அன்பை ஒரு செயல்வடிவமாக, செயலூக்கத்துடன் இணைத்து நிகழத்தக்க கலையாக அணுகுவதையே விரும்புகிறேன். ஒவ்வொருத்தரின் இருப்பையும் அவர்களுடன் இச்சமூகம் கொண்டிருக்கும் கொடுத்து வாங்குகின்ற பண்பையும் பிரக்ஞை பூர்வமாக அவர் வாழ்ந்த சூழலில் அவர்தம் செயல்களினால் புரிந்துகொள்வது பொருத்தமானது. குமாரதேவன் பற்றிய ஞாபகங்களை அவருடைய  தமிழ்ச்சூழலின் மீதான் பங்களிப்பை அவ்வாறு அணுகுதலே அவர் மீதிருக்கும் அன்பின் ஆகக்கூடிய செயலாக இருக்கும் என்று…

July 25, 2023

அரசியல் மயப்பாட்டிலிருந்தே தனிமனிதரினதும்   அமைப்பினதும் சிந்தனையும் செயல்வாதமும் அரசியல் நிலைப்பாட்டிற்குச் செல்கின்றன. அடிப்படையில் சமூகத்தில் இருக்க கூடிய  ஒன்றையொன்று அதிகாரம் செய்யக்கூடிய ‘அரசியல்’ தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வுகளை அடைவதும் அவை பற்றிய சொந்த சிந்தனைனையை வந்தடையும் போது தனி நபர்களோ அவர்கள் பங்குபற்றக்கூடிய அமைப்புகளோ அரசியல் நிலைப்பாட்டை எட்டுகின்றன. உதாரணமாக பெரியாரிய கருத்தியலை ஆதரிக்கவும் அதன் பின்னணியைக் கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை எடுக்க கூடியவர்கள்  இன, மத, சாதிய , பால்…

July 25, 2023

இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன் பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டும் ஒரு ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே…

July 25, 2023

’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறோம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு நான்கைந்து நாட்கள் கழித்துச் சென்று ‘NOW’ என்றொரு படத்தைப் பதிவிட வேண்டும் என்றார். எல்லாத்துறைகளிலும் ‘சமூக சேவை’ என்பது தனிநபர்களையும் சரி, அமைப்புக்களையும் சரி ஒரு வட்டத்திற்கு வெளியே…

July 25, 2023

மரபுரிமைகளை அறிதல், ஆவணப்படுத்தல், அவற்றைக்கொண்டாடுதல் என்ற அடிப்படைகளைக் கொண்ட ‘மரபுரிமை நடையான’ தொன்ம யாத்திரை ஐந்து நடைகளை நிறைவு செய்து ஆறாவது நடைக்குத் தயாராகியுள்ளது. இவ்விடத்தில் மரபுரிமைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் மீது செல்வாக்குடன் இருக்கக் கூடிய இனவாதம், சாதி, மதச்சார்பு, ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குதன்மைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தெளிவு படுத்தல் அவசியமாகவிருக்கின்றது. ஏற்கனவே தேவாலயங்களின் நகரம் என்ற தொன்மயாத்திரை ஊர்காவற்றுறையின் காலனிய காலத்து தேவாலயங்களை நோக்கியதாயும், ஆறாவது தொன்ம யாத்திரை நாட்டுப்புறவியலுடன் இணைந்திருக்கும்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’