April 14, 2024

பறவையின் பங்கு யாழ்ப்பாணப்பகுதிகளில் மா, புளி போன்ற  பயன் தரும் மரங்களை அவை காய்த்து முதிரும் நிலையில் அறுவடை செய்தலை , ‘மரம் உலுப்புதல்’ என்பர். உலுப்பப்படும்  போது மரத்தின் சொந்தக்காரர்கள், மரத்தை உலுப்புவர் ஆகியோருக்கு அறுவடையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் கிடைக்கும். அவற்றோடு மரத்தின் குறித்த காய், கனிகளுள்ள கிளைகள் உலுப்பப்படாது பறவைகள், விலங்குகளுக்கு விடப்படும். இப்படியொரு மரபு இருந்திருக்கிரது. பின்னர் மெல்ல மெல்ல வழங்கொழிந்தது. மரத்தின் முழு அறுவடையும் சொந்தக்காரருக்கு வந்ததுடன் அறுவடை செய்பவர் …

April 12, 2024

நம்முடைய பொதுச்சமூகம் அல்லது பெரும்பான்மை சமூகம் அறியும், நம்பும் வரலாறு பழைய வரலாற்று எழுத்துமுறை சார்ந்தது. பழைய வரலாற்று எழுத்துமுறை என்றால் என்ன?  சுருக்கமாகச் சொன்னால் ஏதோவொரு அதிகார நலனுக்காக எழுதப்பட்ட வரலாறு. அது பன்மைத்துவத்தையும் நெகிழ்வையும் மாற்றம்மிக்க விசைகளையும் மறுப்பதுடன் வன்முறைகளுக்கான  விதைகளைக் கொண்டதுமாகும். அவற்றின் மையப்பகுதிகளில் அதிகாரமற்ற யாரின் குரலும் கிடையாது. பழைய வரலாற்று எழுத்துமுறை அரசர்கள், ஆதிக்கக் குலக்குழுக்கள், ஆதிக்க சாதிகள், ஆண்கள், எசமான்கள், பிரபுக்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் போன்றோரால் அவர்களைப்பற்றி அவர்களும்…

April 11, 2024

நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம்  என்ற என்னுடைய குறிப்பை வாசித்த நண்பர் ஒருவர் ஞாபக சத்தி / நினைவாற்றல் பற்றிக் கேட்டிருந்தார்.  குறிப்பாகக் கல்வி, கலை இலக்கியத்தில் அதன் பயன் பற்றியும் மனனம் செய்தல் போன்ற ஞாபகத்தை  நிலைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றியும் உரையாடல் ஒன்றைச் செய்யலாமா என்றார்.  என்னளவில் அவற்றைப்பற்றிய  புரிதல்களை உரையாடப் பார்க்கிறேன் என்றேன்.   மனித நினைவாற்றல் என்பது அவர்களின் பரிணாம வளர்ச்சியோடு மேம்பாடு அடைந்து வந்த ஒன்று.  மொழி நிகழ்கின்ற முக்கியமான வெளி.  நினைவாற்றலை நிலைபடுத்தல்…

April 9, 2024

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். இரவுப்பயணம், பக்கத்தில் தன்னுடைய ஐம்பதுகளில் இருந்த நபரொருவர் அமர்ந்து வந்தார். அடிப்படையான விசாரிப்புகள், புன்னகையோடு அமைதியாகிவிட்டோம். பகல் வெக்கையின் களைப்பு உடம்பை வறட்டியிருந்ததால்,  கொஞ்சநேரம் வாசித்து விட்டு உறங்கி விட்டேன். நள்ளிரவிற்குப் பிறகு திடுக்கிட்டு எழுந்து  யன்னலால் பார்த்தேன். கிராமங்களின் தோற்றங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிங்களக் கிராமங்களா, தமிழ்க் கிராமங்களா என்று  மட்டுப்பிடிக்க முடியவில்லை. கைபேசியை எடுக்கப் போன போது பக்கத்தில் இருந்தவர்  மதவாச்சி நெருங்குது என்றார். நான் வெளியில் பார்த்தேன் உறுதிப்படுத்த…

February 4, 2024

செம்முகம் ‘சீலன்’  என்று அழைக்கப்படும் சத்தியசீலன்  சமகால  இலங்கைத் தமிழ் அரங்கக் கலைஞர். செம்முகம் ஆற்றுகைக்குழு என்ற பெயரில் அரங்கச் செயற்பாட்டு  வேலைகளை தன்னுடைய குழுவினரோடு முன்னெடுத்து வருகின்றார்.  பல்வேறு அரங்குவடிவங்களையும், பரிசோதனைகளையும், சமூகத்தை முன்னிட்டு மேற்கொண்டு வருகின்றார். அவருடைய இந்த அரங்க வெளிப்பயணம் பற்றியும் அவருடைய கலைசார் நிலைப்பாடுகள் பற்றியும்  பகிர்ந்துகொண்ட உரையாடல் இது. செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தொடக்கம் மற்றும் அதன் பயணம்  பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா? செம்முகம் ஆற்றுகைக் குழுவினுடய பயணம்…

December 27, 2023

‘உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் சொந்தப்பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்’ என்றார் இயக்குனர்அபாஸ் கிரயோஸ்தமி. இந்திய வணிக சினிமாவின் முன்னால் பண்பாட்டின் களத்தில் நின்று நல்ல படம் எடுப்போம் என்று நிற்பது  முக்கியமான கலைத்துவ முடிவுதான். அப்படியான கலைஞர்களை நோக்கிச்செல்வதே இந்த உரையாடல்களைத் தொடக்க முக்கியமான காரணம்.  இலக்கியத்தில் இருந்துகொண்டு ஏனைய சமகால கலைவடிவங்களுடன் உரையாடிப்பார்ப்பது  அதை எழுத்திற்கு கொண்டுவருவது மெல்ல மெல்லச் செய்தாலும் பயன் பெறுமதியோடு இருக்க வேண்டும் என்று…

November 2, 2023

விசாகேச சந்திரசேகரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விசாகேச சந்திரசேகரம், இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் பணியாற்றிவருகிறார். நாவல் ,  நாடகவாக்கம் மற்றும் திரைப்படங்களை இயக்கிவரும் ஒரு கலைஞர். சிங்களத்திலும் தமிழிலும் படைப்புக்களை ஆக்கிவருகின்றார்.  இவருடைய இயக்கத்தில் வெளியான Frangipani , Paangshu ஆகிய திரைப்படங்கள் புகழ்பெற்றவை. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றவை. இவருடைய இயக்கத்தில்  இவ்வருடம் வெளியான மணல் என்ற தமிழ்த் திரைப்படம் சமீபத்தில் திரைத்துறையில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான ரோட்டர்டாமின் (Rotterdam) சர்வதேச திரைப்பட விழாவின்…

September 22, 2023

ஆல்பர் காம்யூ கிரேக்க தொன்மங்களில் ஒன்றான  sisyphus இன் உருவகக் கதையை குறிப்பிடுவார், கிரேக்க புராணங்களின் படி sisyphus கடவுளர்களால் தண்டிக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஓர் உருளை வடிவப்பாறையை ஒலிம்பஸ்மலைமேலே ஏற்ற வேண்டும்  உச்சிக்கு ஏற்றிய பின் அங்கிருந்து அதை தள்ளி விட வேண்டும். மீண்டும் கீழே வந்து அதை மேலே ஏற்றிச்செல்ல வேண்டும்  மீண்டும் மீண்டும் இடை விடாது இதைச்செய்ய வேண்டும் பசியோ, தாகமோ, மூப்போ , மரணமோ sisyphus க்கு இருக்காது. தொடர்ந்து…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’