July 25, 2023

’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறோம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு நான்கைந்து நாட்கள் கழித்துச் சென்று ‘NOW’ என்றொரு படத்தைப் பதிவிட வேண்டும் என்றார். எல்லாத்துறைகளிலும் ‘சமூக சேவை’ என்பது தனிநபர்களையும் சரி, அமைப்புக்களையும் சரி ஒரு வட்டத்திற்கு வெளியே…

July 25, 2023

மரபுரிமைகளை அறிதல், ஆவணப்படுத்தல், அவற்றைக்கொண்டாடுதல் என்ற அடிப்படைகளைக் கொண்ட ‘மரபுரிமை நடையான’ தொன்ம யாத்திரை ஐந்து நடைகளை நிறைவு செய்து ஆறாவது நடைக்குத் தயாராகியுள்ளது. இவ்விடத்தில் மரபுரிமைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் மீது செல்வாக்குடன் இருக்கக் கூடிய இனவாதம், சாதி, மதச்சார்பு, ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குதன்மைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தெளிவு படுத்தல் அவசியமாகவிருக்கின்றது. ஏற்கனவே தேவாலயங்களின் நகரம் என்ற தொன்மயாத்திரை ஊர்காவற்றுறையின் காலனிய காலத்து தேவாலயங்களை நோக்கியதாயும், ஆறாவது தொன்ம யாத்திரை நாட்டுப்புறவியலுடன் இணைந்திருக்கும்…

July 25, 2023

சனநாயகம் புழக்கத்திற்குரிய வெளியாக திறந்து விடப்பட்ட பிறகு  மக்களின் பங்குபற்றுதலுக்கான வடிவங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் சமூகத்தின் கூட்டான மனநிலை, சனநாயக வடிவங்களை எதிர்ப்புணர்வுக்கும், போராடுதலுக்கும் தெரிவு செய்யும் காலத்தை தொடங்கியிருக்கிறது. அசலான சமூக வரலாறு என்பது பண்பாட்டு அடக்கு முறைகளையும் அதெற்கெதிரான போராட்டங்களையும் கொண்டிருக்கிறது. கடந்து சென்ற  நாட்களில் இலங்கையில் நடைபெற்ற சனநாயகப்போராட்டங்களில் நிலம் மற்றும் அதனுடைய மரபுரிமைகள் தொடர்ப்பான போராட்டங்கள் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன அரசியல் அதிகாரம், பண்பாட்டு அதிகாரம், பொருளாதார அதிகாரம் முதலானவற்றினால்…

July 25, 2023

– கேணிகள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் மரபுச்சின்னங்கள் – சமூக வரலாற்றை எழுதுதலும் அடையாளமும். ஒடுக்கப்படுகின்ற இனம் தன்னுடைய இனவரலாற்றை நிகழ்காலத்திலிருந்து ஒழுங்குபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. அது இதுகாறும் சொல்லப்பட்ட கடவுள்களின், அரசர்களின், முதலாளிகளின், பணக்காரர்களின் வரலாறாக  எழுதப்படலாகாது. ஒரு இனம் தன்னுடைய இனவரைபின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதவேண்டும். அது விளிம்புநிலை சமூகங்களின், ஒடுக்கப்பட்டவர்களின், குரலற்றுப்போனவர்களின், குரலற்று இருப்பவர்களின் நிலைமைகளையும்  உள்வாங்கி பன்மைத்துவ நிலையில் எழுதுப்படுவதாக இருக்கவேண்டும்.   மன்னர்களின் வரலாற்றையே வரலாறாக எழுதும் ”மேலிருந்து கீழ்நோக்குதல்”…

July 25, 2023

திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்’ என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம்  அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும்  இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி  ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது.  தமிழர்களைப்  பொறுத்த வரையிலும் கூடப்…

July 25, 2023

  மறைந்து போன அத்தனை தலைமுறைகளின் மரபுகளும், வாழ்ந்திருப்பவர்களின் மூளையை அழுத்திக்கொண்டிருக்கின்றன.-கார்ல் மார்க்ஸ் பொருட்களும் சேணங்களும் மனிதர்களைச் சவாரி செய்கின்றன.-எமர்சன் 1 ஈழத்தில் காணப்படக்கூடிய கலாசார மரபுரிமைகளுக்குள் அதனுடைய கட்டடக்கலைகளும் கட்டட மரபும் பிடித்துக்கொள்கின்ற இடம் முக்கியமானது. ஒரு கட்டடத்தை; அது நிரப்பியுள்ள வெளியினதும், அதை சூழ்ந்துள்ள வெளியினதும் அக, புறவயமான வரலாற்றுப் பின் புலம் , சமூக அர்த்தப்பாடு, அழகியல் என்பவற்றைக்கொண்டு அவற்றை மரபுரிமைகளாகக் கருதுகின்றோம். ஆனால் பொதுப்புத்தியில், இக்கட்டடங்களை வாசிக்கும்போது நம்மிடம் அரசியல் மயமற்ற…

July 25, 2023

இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. குறித்த துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும் பயன்பாட்டிலும்…

July 25, 2023

என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில் வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக்காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டிப் பயப்படுத்த ஒடுக்கப்பட்ட சமூகமல்லாத…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’