August 26, 2023

நண்பர்களுடன்  யூலை முடிவில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு கண்டியில் சென்று இறங்கினோம். நீளமாக திட்டமிடப்படாத அதிகம் பணச்செலவற்ற  எக்களுடைய வட்சப் குறூப்பின் பெயரைப்போல அதுவொரு ‘கல்விச்சுற்றுலா’ அவ்வளவுதான். முதலில் கண்டி பிறகு ஹட்டன் மிகுதி எல்லாம் அந்தந்த நேரத்து நியாயம் என்று  விட்டு விட்டு புறப்பட்டிருந்தோம். பொதுப்போக்குவரத்தின் மூலம் பிரயாணப்படுவது என்று திட்டமிட்டிருந்தோம்.  இம்முறை மலையகத்திற்கு செல்வதில் தனிப்பட்டு என்னை ஆர்வப்படுத்தியது மலையக மக்கள் இந்த நாட்டிற்கு தோட்டத்தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டு இருநூறு வருடங்கள் கடந்திருந்த நிகழ்வுகளும் சமநேரத்தில்…

July 25, 2023

இயற்கை மற்றும் சமூகச்சூழமைப்பில் மனிதர்கள் இயங்கும் முறையும் அவர்களின் நடத்தை முறையும்தான் உளவியலின் அடிப்படைகள். -மிக்காயில் பக்தின் அன்பை ஒரு செயல்வடிவமாக, செயலூக்கத்துடன் இணைத்து நிகழத்தக்க கலையாக அணுகுவதையே விரும்புகிறேன். ஒவ்வொருத்தரின் இருப்பையும் அவர்களுடன் இச்சமூகம் கொண்டிருக்கும் கொடுத்து வாங்குகின்ற பண்பையும் பிரக்ஞை பூர்வமாக அவர் வாழ்ந்த சூழலில் அவர்தம் செயல்களினால் புரிந்துகொள்வது பொருத்தமானது. குமாரதேவன் பற்றிய ஞாபகங்களை அவருடைய  தமிழ்ச்சூழலின் மீதான் பங்களிப்பை அவ்வாறு அணுகுதலே அவர் மீதிருக்கும் அன்பின் ஆகக்கூடிய செயலாக இருக்கும் என்று…

July 25, 2023

இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன் பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டும் ஒரு ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே…

July 25, 2023

’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறோம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு நான்கைந்து நாட்கள் கழித்துச் சென்று ‘NOW’ என்றொரு படத்தைப் பதிவிட வேண்டும் என்றார். எல்லாத்துறைகளிலும் ‘சமூக சேவை’ என்பது தனிநபர்களையும் சரி, அமைப்புக்களையும் சரி ஒரு வட்டத்திற்கு வெளியே…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’